
புதுச்சேரி: முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் அறிவித்தார்.
நாடு முழுவதும் மீண்டும் கரோனா தொற்று பரவ தொடங்கியுள்ளது. என்.பி.1.8.1 என்ற கரோனா தொற்று பரவி வருவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, தமிழகத்தில் கரோனா தொற்று பரவி வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கர்நாடகாவில் 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 84 வயதான முதியவர் பலியாகியுள்ளார்.