
சென்னை: போலீஸ் எஸ்ஐ-க்கான தேர்வு வழக்கமான முறையில் நடைபெறுமா அல்லது உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியபடி புதிய முறையில் நடைபெறுமா என 3 லட்சம் தேர்வர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் 1,299 எஸ்ஐ காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மாதம் 4-ம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. இதையடுத்து, சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் விண்ணப்பித்தனர். வழக்கமாக காவல் துறையில் 2-ம் நிலை, முதல்நிலை மற்றும் தலைமைக் காவலர்களாக பணியில் உள்ளவர்களும் எஸ்ஐ தேர்வுக்கு விண்ணபிப்பார்கள். இவர்களுக்கு 20 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படும். மீதம் உள்ள 80 சதவீதம் பொதுத் தேர்வர்களுக்கானது.