
அரக்கோணம்: திமுகவினர் பொதுக்கூட்டம் நடத்தி தன்னை குற்றவாளிபோல் சித்தரிப்பதாக குற்றம்சாட்டி, திமுக முன்னாள் பிரமுகர் மீது புகார் அளித்த கல்லூரி மாணவி கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பருத்திப் புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரீத்தி(21), கல்லூரி மாணவி.
இவர் சமீபத்தில் தனது கணவரும் மற்றும் முன்னாள் திமுக அரக்கோணம் மத்திய ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளருமான தெய்வச்செயல்(40) என்பவர் மீது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு புகார்கள் தொடர்பாக அரக்கோணம் மகளிர் காவல் நிலையத்தில் சமீபத்தில் புகார் அளித்தார்.