
சென்னை: ‘நெல் கொள்முதலில் முறைகேடு-தனியார் நிறுவனத்துக்கு தமிழக அரசு துணை போகலாமா?’ என்ற தலைப்பில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் பி.ஆர். பாண்டியன் எழுதிய கட்டுரை நேற்று (திங்கள்) வெளியாகி இருந்தது.
இந்நிலையில், விவசாயிகளிடம் கொள்முதல் செய்த நெல்லுக்கு 10 நாட்களில் பணம் வழங்கப்படும் அரசு உறுதியை அளித்துள்ளது. தமிழகத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க வலியுறுத்தி சென்னை கோயம்பேட்டில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின்மேலாண் இயக்குநர் அலுவலகத்தை இன்று (செவ்வாய்) முற்றுகையிடப்படும் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு அறிவித்திருந்தது.