• May 27, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பது காலத்தின் கட்டாயம். இத்திட்டத்தை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆதரித்தார். ஆனால், தற்போது முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கிறார். என ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் கருத்தரங்கம், தமிழக பாஜக சார்பில் சென்னை திருவான்மியூரில் நேற்று நடைபெற்றது. ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் பங்கேற்று கருத்தரங்கைத் தொடங்கி வைத்தார். அவருக்கு ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ குழு மாநில ஒருங்கிணைப்பாளரும், தமிழக பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன், ‘வேல்’ வழங்கி வரவேற்றார். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலை வகித்தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *