
சென்னை: திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் கட்டளைகளுக்கு பாத்தியப்பட்ட சொத்துகளை முறையாக நிர்வகிக்காதது ஏன்? என்பது குறித்து வேளாக்குறிச்சி மடாதிபதிக்கு இந்துசமய அறநிலையத்துறை அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் பணிகளை மேற்கொள்ளவும், சொத்துகளைப் பராமரிக்கவும் 13 கட்டளைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் அபிஷேகக் கட்டளை மற்றும் அன்னதானக் கட்டளைகளுக்கு வேளாக்குறிச்சி மடாதிபதியான ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பரம்பரை அறங்காவலராக இருந்து வருகிறார்.