
நாட்டில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. கேரளா, மகாராஷ்டிரா, டெல்லி ஆகிய மாநிலங்கள் முறையே முதல் மூன்று இடங்களில் உள்ளன.
நாட்டில் கரோனா வைரஸ் மீண்டும் பரவி வருகிறது. மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று காலை 8 மணி நிலவரப்படி கரோனா பாதிப்பு விவரத்தை பகிர்ந்து கொண்டுள்ளது.