
சென்னை: ரயிலில் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி (ஸ்லீப்பர் பெட்டிகளில்) பெட்டிகளில் டிக்கெட் கிடைக்காமல் காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணிகளுக்கு ஏசி வகுப்பு பெட்டிகளில் காலியாக உள்ள இடங்கள் கூடுதல் கட்டணம் இன்றி ஒதுக்கும் வசதியை மேலும் 2 நிலைகள் வரை விரிவாக்கம் செய்யப்படவுள்ளது.
இதன் மூலமாக, 2-ம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகளில் காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணிகளுக்கு 3-ம் வகுப்பு ஏசி அல்லது 2 -ம் வகுப்பு ஏசி பெட்டிகளில் காலியாக உள்ள இடங்கள் கூடுதல் கட்டணம் இன்றி ஒதுக்கப்பட உள்ளது.