
சென்னை: தரக்குறைவான உணவு விநியோகத்தால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க ஜொமாட்டோ உணவு டெலிவரி நிறுவனம் மற்றும் உணவகத்துக்கு சென்னை நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த ஜெகபிரபு நாராயணசாமி என்பவர் வேளச்சேரியில் உள்ள அர்ஜூன் மம்மி டாடி ஆந்திரா மெஸ்ஸில் ஜொமாட்டோ மூலம் அசைவு உணவு ஆர்டர் செய்துள்ளார். அந்த உணவை சாப்பிட்ட பின்னர் ஜெகபிரபுக்கு மூச்சுத்திணறல், தலைச் சுற்றல், மாரடைப்பு உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது. இரண்டு நாள் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிய ஜெகபிரபு, இது குறித்து உணவுத்துறை அதிகாரிகளிடம் புகாரளித்தார்.