
1992 ஆம் ஆண்டு மாடலாக பணியாற்றிய போது ஐஸ்வர்யா ராய்க்கு கிடைத்த சம்பளம் குறித்த பில் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
ஐஸ்வர்யா ராய் 1994 ஆம் ஆண்டு உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டார். இவர் தற்போது இந்தி, தமிழ், பெங்காலி, ஆங்கிலம் ஆகிய மொழி படங்களில் நடித்து வருகிறார்.
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான இருவர் படத்தின் மூலம் திரை உலகிற்கு ஐஸ்வர்யா ராய் அறிமுகமானார்.
உலக அழகியாக தேர்வு செய்யப்படுவதற்கு முன்பு மாடலிங் துறையில் பணியாற்றிய போது ஐஸ்வர்யா ராயின் சம்பளம் குறித்த நகல் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
ஒரு பத்திரிகை பட்டியல் படப்பிடிப்பிற்காக கிருபா கிரியேஷன் என்ற நிறுவனத்தின் மாடலாக ஒப்புக்கொண்டுள்ளார் ஐஸ்வர்யா ராய். அந்த வைரலாகும் நகலின் விவரப்படி, மே 23 1992 ஆம் ஆண்டு இந்த படப்பிடிப்பை அவர் மேற்கொண்டுள்ளார். இதற்காக அவர் 1,500 ரூபாய் பெற்றதும் அதில் இடம்பெற்றுள்ளது. இதன் நகல்தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அண்மையில் சிறந்த திரைப்பட விழாக்களில் முதன்மையானதாகக் கருதப்படும் கான் விழாவில், ஐஸ்வர்யா ராய் கலந்துகொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

ஐஸ்வர்யா ராய் உலகளவில் பிரபலமான அழகு சாதன பிராண்டான L’Oréal Paris-ன் விளம்பரத் தூதராக 2003 முதல் இருந்து வருகிறார்.
இந்த நிறுவனம் கான் திரைப்பட விழாவின் அதிகாரபூர்வ ஒப்பனை கூட்டாளியாக (Official Makeup Partner) இருப்பதால், ஐஸ்வர்யா ராய் இந்த விழாவில் தொடர்ந்து பங்கேற்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.