
சென்னை: கடலூரில் உள்ள 200 ஆண்டுகள் பழமையான விளையாட்டு திடலை, பலாப்பழ மதிப்பு கூட்டு மையமாக மாற்றுவதற்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், கடலுார் மாவட்டத்தை சேர்ந்த ஜி.ராஜலிங்கம் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “கடலுார் மாவட்டம், சி.என்.பாளையம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பட்டீஸ்வரம் கிராமத்தில் 2 ஏக்கர் பரப்பளவில் ‘மலை திடல்’ என அழைக்கப்படும் பெரிய விளையாட்டு மைதானம் உள்ளது. 200 ஆண்டுகள் பழமையான இந்த விளையாட்டு மைதானத்தை, பள்ளி மாணவ, மாணவிகள் விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், மக்களிடம் எவ்வித கருத்து கேட்புக் கூட்டமும் நடத்தாமல், கடலூர் மாவட்ட ஆட்சியர், பலாப்பழ மதிப்பு கூட்டு மையம் கட்டுவதற்கான அனுமதி வழங்கி, கடந்த ஜனவரி மாதம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.