• May 26, 2025
  • NewsEditor
  • 0

காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூார்’ என்ற பெயரில் பாகிஸ்தானின் பல இடங்களில் தாக்குதலில் நடத்தியது. இதில் இந்திய ராணுவம் பெற்ற வெற்றியை போற்றும் விதமாகவும், ராணுவ வீரர்களின் மகத்தான சேதவைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் காங்கிரஸ் சார்பில், ‘தேசம் காக்கும் ராணுவத்துக்கு சல்யூட்’ என்ற தலைப்பில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் திருச்சியில் நேற்று நடைபெற்றது.

மேஜர் சரவணன் நினைவு சதுக்கத்திலிருந்து காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் பேரணி புறப்பட்டு, திருவள்ளுவர் பேருந்து நிலையம் வரை நடைபெற்றது. இதில், கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர். தொடர்ந்து, அங்கு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் எல்.ரெக்ஸ் வரவேற்றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *