
புதுடெல்லி: நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் டெல்லி இல்லத்தில் கட்டுக்கட்டாக பணம் கண்டெடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யக் கோரிய மனுவை உச்ச நீதிமன்ற நிர்வாகம் நிராகரித்துள்ளது.
தற்போது அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் யஷ்வந்த் வர்மா, இதற்கு முன் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தார். கடந்த மார்ச் 14-ம் தேதி இரவு அவரது டெல்லி வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தை அடுத்து, தீ அணைப்பு வீரர்களும் போலீசாரும் அங்கு விரைந்தனர். அப்போது, தீயில் இருந்த நிலையில் ஏராளமான ரூபாய் நோட்டுக்கள் கட்டுக்கட்டாக இருப்பதை அறிந்து அது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.