
நடிகர் அல்லு அர்ஜுன், ‘புஷ்பா 2’ படத்தை அடுத்து நடிக்கும் படத்தை, அட்லி இயக்குகிறார். சயின்ஸ் பிக்‌ஷன் கதையை கொண்ட இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. “சர்வதேச தரத்துடன் இந்தியாவில் தயாராகும் ‘பான் வேர்ல்ட்’ படமாக இது இருக்கும்” என படக் குழுவினர் ஏற்கெனவே தெரிவித்திருந்தனர்.
ஜூன் மாத இறுதியில் இதன் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே இந்தப் படத்தில் 6 ஹீரோயின்கள் நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்காகத் தமிழ் மற்றும் பாலிவுட்டில் உள்ள முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்து வருவதாகக் கூறப்படுகிறது.