• May 26, 2025
  • NewsEditor
  • 0

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள புத்தாநத்தத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் முதல் பிரசவத்துக்காக திருச்சி தில்லை நகரில் உள்ள தனியார் மருத்துவமனையை அணுகினார்.

கடந்த 26-09-2021 அன்று மருத்துவமனையில் பெண் மருத்துவர் ஒருவரும், மயக்கவியல் மருத்துவரும் இணைந்து மயக்க மருந்து கொடுத்து, அவருக்கு அறுவை சிகிச்சை செய்து, பெண் குழந்தை பிறந்தது.

ஆனால், பிரசவம் நடந்ததற்குப் பிறகு அந்தப் பெண்ணுக்கு வலது காலில் உணர்விழப்பு, சோர்வடைதல், கட்டுப்பாடின்றி சிறுநீர் வெளியேறுதல் போன்ற உடல்நலப் பிரச்னைகள் ஏற்பட்டன.

இதற்கு, முதுகெலும்பில் சரிவர மயக்க மருந்து கொடுக்காததே காரணம் எனக் கூறப்படுகிறது. இப்பிரச்னைகளுக்கு மருத்துவம் பார்த்தும் அவருக்கு உரிய தீர்வு கிட்டாததால், இதுவரை அவரால் தரையில் குனிந்து உட்கார முடியாமல், சரிவர நடக்க முடியாமல் பல பிரச்னைகளைச் சந்தித்தார்.

இதையடுத்து அந்தப் பெண், மருத்துவர்களின் அலட்சியத்தால் தனக்கு ஏற்பட்ட இன்னலுக்கும், மன உளைச்சலுக்கும், வருங்கால மருத்துவச் செலவுக்கும் நிவாரணம் கோரி திருச்சி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்திடம் கடந்த 18-08-2022 அன்று மனுத் தாக்கல் செய்தாா்.

இந்த மனுவை திருச்சி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் டி. சேகா், உறுப்பினா் ஜெ.எஸ். செந்தில்குமாா் அடங்கிய அமா்வு நேற்று வெள்ளிக்கிழமை விசாரித்தது.

trichy

விசாரணைக்குப் பிறகு, சிகிச்சையில் கவனக் குறைவு, மன உளைச்சல், வலிக்காகச் சரியாக மயக்க மருந்து கொடுக்காத தனியார் மருத்துவமனையானது மனுதாரருக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடும், மருத்துவமனையின் மயக்க மருந்து நிபுணர் தனது பங்காக ரூ. 20 லட்சமும், வழக்குச் செலவுக்காக ரூ. 15,000-யும் வழங்க வேண்டும் என்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதுவும், இதை அனைத்தையும் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் வழங்க வேண்டும் என நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கவனக்குறைவாக மருத்துவம் பார்த்ததாக தனியார் மருத்துவமனை நிர்வாகம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ. 30 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று நுகர்வோர் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *