• May 26, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழக அரசின் தலைமை காஜி முஃப்தி சலாவுதீன் முகமது அயூப் மறைவையெய்திய நிலையில், அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். தலைமை காஜியின் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

கர்நாடக நவாப்களின் நீதிமன்றத்தில் திவானாக பணியாற்றிய திவான் முகமது கவுஸ் ஷர்ஃப்-உல்-முல்க் குடும்பத்தைச் சேர்ந்தவர் சலாவுதீன் முகமது அயூப். அவர் எகிப்தில் உள்ள அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் அல்இஜாசதுல் ஆலியா பட்டத்தைப் பெற்றவர். அரபு மொழி மற்றும் இலக்கியத்தில் எம்ஏ, எம்ஃபில், முனைவர் பட்டங்களை பெற்றிருந்தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *