
சேலம்: சேலத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. போலீஸார் நடத்திய சோதனையில் அது புரளி என்பது தெரியவந்தது. அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமி, கோவையில் இருந்து நேற்று மாலை 7 மணி அளவில் சேலம் சூரமங்கலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது இல்லத்துக்கு வந்தார்.
இந்நிலையில் அவரது வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக சென்னையில் உள்ள காவல்துறை கட்டுப்பாட்டு அலுவலகத்துக்கு தகவல் வந்தது. இதையடுத்து சேலம் மாநகர காவல் துறை அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.