
கோவை: கோவையின் முக்கிய நீராதாரமான சிறுவாணி அணை, பாலக்காடு மாவட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. அணையில் இருந்து எடுக்கப்படும் நீர் சாடிவயல் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டு, அங்கு சுத்திகரிப்பு செய்யப்படுகிறது.
பின்னர், வழியோரம் உள்ள 22-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும், மாநகராட்சியின் 30-க்கும் மேற்பட்ட வார்டுகளுக்கும் விநியோகிக்கப்படுகிறது. அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 49.50 அடி என்றாலும், அணையின் பாதுகாப்பு காரணங்களுக்காக 44.61 அடி வரை மட்டுமே நீர் தேக்கப்படுகிறது. சிறுவாணி அணையில் நேற்றைய (மே 24) நிலவரப்படி நீர்மட்டம் 19.02 அடியாக இருந்தது.