
கோவை, மதுரைக்கான மெட்ரோ திட்டங்கள், மீனவர்கள் விவகாரத்தில் நடவடிக்கை, எஸ்எஸ்ஏ திட்ட நிதி விடுவிப்பது ஆகியவை குறித்து பிரதமரிடம் வலியுறுத்தியதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நிதி ஆயோக் கூட்டத்துக்குப்பின், பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலி்ன் சந்தித்து, தமிழகத்தின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தினார். அதன்பின், செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கூறியதாவது: