
அரூர்: 2026 தேர்தலில் நாம் ஆட்சிக்கு வர, பாமக கூட்டணி ஆட்சிக்கு வர சிந்தித்து செயல்படவேண்டும், என தருமபுரி மாவட்டம் கடத்தூரில் நடந்த நிகழ்ச்சியில் அன்புமணி ராமதாஸ் பேசினார்.
தருமபுரி மாவட்டம் கடத்தூரில், வன்னியர் சங்கம் மற்றும் பாமகவின் மூத்த முன்னோடி மறைந்த கனல் ராமலிங்கத்தின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று படத்தினை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: