
புதுடெல்லி: நிதி ஆயோக் கூட்டத்துப் பின்னர் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தினார்.
பிரதமரிடம் வைத்த கோரிக்கைகள் என்னென்ன? – டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று (மே 24) நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப் பின்னர், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது: “நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழகத்துக்கு என்னென்ன செய்ய வேண்டும், என்ன நிலுவை உள்ளது என்பதை பட்டியலிட்டு பேசியுள்ளேன்.