• May 24, 2025
  • NewsEditor
  • 0

புது டெல்லி: இந்திய கடற்படை மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை தொடர்பான முக்கிய தகவல்களை பாகிஸ்தான் முகவருடன் பகிர்ந்து கொண்ட குற்றச்சாட்டில் குஜராத் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்ச் பகுதியைச் சேர்ந்த சுகாதாரப் பணியாளர் சஹ்தேவ் சிங் கோஹில் (28), 2023 ஆம் ஆண்டு வாட்ஸ்அப் மூலம் தன்னை அதிதி பரத்வாஜ் என்று சொல்லிக்கொண்ட ஒரு பாகிஸ்தான் முகவருடன் அறிமுகமானார். இதனையடுத்து கோஹில், புதிதாக கட்டப்பட்ட மற்றும் கட்டுமானத்தில் இருந்த இந்திய கடற்படை மற்றும் எல்லை பாதுகாப்புப் படை தளங்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவருக்கு அனுப்பினார் என்று குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படையின் மூத்த அதிகாரி கே.சித்தார்த் தெரிவித்துள்ளார்

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *