• May 24, 2025
  • NewsEditor
  • 0

டோக்கியோ: பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு ஜப்பானில் தன்னிச்சையான ஆதரவு இருப்பதாகக் கூறிய முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், இந்தியாவின் அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழுவுக்கு ஜப்பானில் கிடைத்த வரவேற்பு திருப்தி அளிப்பதாக தெரிவித்தார்.

ஐக்கிய ஜனதாதளம் எம்.பி. சஞ்சய் குமார் ஜாவின் தலைமையில் ஜப்பான் சென்றுள்ள அனைத்துக் கட்சிக் குழுவில் இடம் பெற்றுள்ள முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியதாவது: இது மிகவும் திருப்திகரமான மற்றும் சிறப்பான பயணமாக இருந்தது. பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு தன்னிச்சையான ஆதரவு கிடைத்தது உற்சாகம் அளிக்கிறது. எந்த ஒரு பயங்கரவாதத்துக்கும் எதிராக இங்கே முழுமையான ஆதரவு இருக்கிறது. மேலும் பஹல்காமில் நமக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *