
சென்னை: “தொடர்ந்து 3 நிதி ஆயோக் கூட்டங்களை நிராகரித்துவிட்டு இப்போது பிரதமர் மோடியை சந்திக்கச் செல்வது, அமலாக்கத் துறை சோதனைக்காகவா?” என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
சி.பா.ஆதித்தனாரின் நினைவுநாளையொட்டி, சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்திய பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான பணிகளை நாம் தமிழர் கட்சி ஏற்கெனவே தொடங்கி விட்டது. தற்போது சின்னம் கிடைத்துவிட்டதால், கட்சியினர் களத்தில் இறங்கி பணியாற்றி வருகின்றனர்.