
புதுடெல்லி: பல மாதங்கள் இடைவெளிகளுக்குப் பின்பு, இந்தியாவின் நகர்ப்புறங்களில் கரோனா பாதிப்பு மீண்டும் பரவிவருகிறது. இதனால் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்க அறிவுத்தப்பட்டுள்ளன.
கேரளா, தமிழகம் மற்றும் கர்நாடகாவில் மே மாதத்தில் புதிய கரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. அதேபோல் மூன்று ஆண்டுகளுக்கு பின்பு தேசிய தலைநகர் டெல்லியில் கரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. என்றாலும் இவைகள் தீவிரத் தன்மையற்ற, பாதிப்பு குறைவானவையே. இதுவரை இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை. தெற்காசியாவில் ஜேஎன்.1 மாறுபாடு (ஓமிக்ரானின் துணை திரிபு) பரவல் காரணமாக கரோனா பாதிப்புகள் அதிகரித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த வைரஸ் பாதிப்பு இப்போது அதிகரித்து வந்தாலும் இதனை கவலைக்குறிய மாறுபாடு என்று உலக சுகாதார நிறுவனம் இன்னும் வகைப்படுத்தவில்லை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.