
திருவள்ளூர்: பூண்டி ஏரி நீரால், முழு கொள்ளளவை எட்டும் நிலையில் புழல் ஏரி உள்ளது. இதைத் தொடர்ந்து பூண்டி ஏரியிலிருந்து புழல் ஏரிக்கு நீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னைக்கு குடிநீர் தரும் முக்கிய ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. இந்த ஏரியில், மழைக்காலங்களில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து வரும் மழைநீரும், சென்னை குடிநீருக்காக தெலுங்கு- கங்கை திட்டத்தின் கீழ், ஆந்திர மாநிலம்-கண்டலேறு அணையிலிருந்து திறந்து விடப்படும் கிருஷ்ணா நதி நீரும் சேமித்து வைக்கப்படுவது வழக்கம்.