
சென்னை: சென்னை, புழல் மத்திய சிறையில் விசாரணை கைதி ஒருவர், பிளேடால் கழுத்து, வயிற்றில் கிழித்துக் கொண்டும், பிளேடை விழுங்கியும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை புழல் மத்திய சிறையில் விசாரணை, தண்டனை, மகளிர் பிரிவுகளில் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில், ஒருவர் சென்னை- மாத்தூரை சேர்ந்த செபாஸ்டின் டேனியல் (23). இவர், குட்கா வழக்கு தொடர்பாக சமீபத்தில் எழும்பூர் போலீஸாரால் கைது செய்யப்பட்டு, விசாரணை பிரிவில் அடைக்கப்பட்டார்.