
மைசூர் சாண்டல் சோப்பின் பிராண்ட் அம்பாசிடராக நடிகை தமன்னாவை கர்நாடக அரசு இரண்டு வருடத்திற்கு ஒப்பந்தம் செய்திருக்கிறது. இதற்காக அவருக்கு 6.20 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
கன்னட நடிகர்களை தேர்வு செய்யாமல் பாலிவுட் நடிகையான தமன்னாவை ஏன் தேர்வு செய்தீர்கள்? என்று பலரும் கர்நாடக அரசுக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இதுதொடர்பாக கர்நாடக மாநில தொழில் துறை அமைச்சர் பாட்டீல் விளக்கம் அளித்திருக்கிறார்.
“மைசூரு சாண்டல் நிறுவனத்தின் வணிகத்தை அடுத்த 3 ஆண்டுகளில் ரூ.5 ஆயிரம் கோடியாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்.
நடிகை தமன்னாவை விளம்பர தூதராக நியமிப்பதற்கு முன்பு நாங்கள் ராஷ்மிகாவை தொடர்பு கொண்டு கேட்டோம். அவர் வேறொரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்ததால், தன்னால் முடியாது என்று கூறினார்.
அதன்பின் நடிகை ஸ்ரீலீலாவை தொடர்பு கொண்டோம். அவரும் முடியாது என, கூறினார்.

கன்னடரான தீபிகா படுகோனேவிடமும் கேட்டோம். அவருக்கு சொந்த பிராண்ட் இருப்பதால் பிசியாக இருக்கிறார்.
கன்னட நடிகையர் முன் வராததால், கமிட்டியின் ஆலோசனைப்படி, நாங்கள் நடிகை தமன்னாவை தேர்வு செய்தோம்” என்று விளக்கமளித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs