• May 24, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: மணிப்பூர் இனக்கலவரம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை விசாரணை செய்து வரும் வழக்குகளை விசாரிப்பதற்காக, சுரசந்த்பூரில் உள்ள ஒரு செசன்ஸ் நீதிமன்றம் என்ஐஏ சிறப்பு நீதிமன்றமாக மாற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேசிய புலனாய்வு முகமை சட்டம் 2008, பிரிவு 11-ல் வழங்கப்பட்டிருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி மத்திய அரசு, சுரசந்த்பூர் மாவட்ட நீதிமன்றம் மற்றும் அமர்வு நீதிமன்றத்தினை, தேசிய புலனாய்வு முகமை சிறப்பு நீதிமன்றமாக நியமிக்கிறது." என்று கூறப்பட்டுள்ளது. சிறப்பு நீதிமன்றத்தின் அதிகாரவரம்பு மணிப்பூர் முழுவதும் நீடிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *