
புதுடெல்லி: பாகிஸ்தானின் குண்டு வீச்சு தாக்குதலில் பாதிக்கப்பட்டோர் குடும்பத்தினரை சந்திக்க மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நாளை (மே 24) ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதிக்குச் செல்கிறார்.
ஏப்ரல் 22 அன்று பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலை நடத்தியது. ஆபரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தான் நடத்திய பீரங்கி தாக்குதலில், அதிகம் பாதிக்கப்பட்டது ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதி ஆகும். இந்த தாக்குதலில் 27 பேர் கொல்லப்பட்டனர், 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.