
தூய்மை பணியாளர்களை தொழில் முனைவோராக்கும் திட்டத்தில் செல்வப்பெருந்தகையின் நெருங்கிய உறவினர் அங்கம் வகித்த நிறுவனம் அதிக லாபம் அடைந்ததாக குற்றம்சாட்டி சிபிஐ விசாரணை கோரி சவுக்கு சங்கர் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.
தூய்மை பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்றுவதற்கான தமிழக அரசின் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டம் மத்திய அரசின் நமஸ்தே என்ற திட்டம் ஆகியவற்றில் முறைகேடு நடப்பதாக யூடியூபரான சவுக்கு சங்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.