• May 23, 2025
  • NewsEditor
  • 0

மாஸ்கோ: திமுக எம்.பி கனிமொழி தலைமையிலான அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் அடங்கிய தூதுக் குழு இன்று மாஸ்கோவில் ரஷ்ய வெளியுறவு விவகாரங்களுக்கான கூட்டமைப்பு கவுன்சில் குழுவின் முதல் துணைத் தலைவர் உட்பட செனட்டர்கள் பலரையும் சந்தித்தது.

இது குறித்து ரஷ்யாவில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 'பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் ஒன்றாக இணைந்துள்ளோம். ரஷ்யாவின் வெளியுறவு விவகாரங்களுக்கான குழுவின் முதல் துணைத் தலைவர் ஆண்ட்ரி டெனிசோவ் மற்றும் பிற செனட்டர்களுடன் எம்.பி கனிமொழி தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழு சந்திப்பு நடத்தியது' என்று தெரிவித்துள்ளது. முன்னதாக, ரஷ்யாவுக்கான இந்தியத் தூதர் வினய் குமார், அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவுக்கு இந்தியா – ரஷ்யா உறவுகளின் பல்வேறு அம்சங்கள் குறித்து விளக்கினார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *