• May 23, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: இந்தியா – பாகிஸ்தான் இடையேயான ராணுவ நடவடிக்கை விவகாரத்தில், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை சரிந்துவிட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஜேஜே விளக்குவாரா: இந்தியா ஏன் பாகிஸ்தானுடன் இணை வைக்கப்படுகிறது? பாகிஸ்தானைக் கண்டிப்பதில் ஒரு நாடு கூட நம்மை ஆதரிக்கவில்லையே ஏன்? இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் "மத்தியஸ்தம்" செய்ய ட்ரம்பிடம் யார் கேட்டார்கள்?" என்று கேள்விகளை எழுப்பியுள்ளார். தொடர்ந்து, "இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை சரிந்துவிட்டது" என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *