
சென்னை: ‘தமிழகத்தில் பாஜகவுக்கு ஒரு எம்.பி. கூட இல்லை என்பதால் கல்விக்காக வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு ஒதுக்குவதில்லை’ என தமிழக அரசு தரப்பில் பகிரங்கமாக குற்றம்சாட்டிய நிலையில், இதுதொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்றம் விசாரணையை இன்றைக்கு தள்ளிவைத்துள்ளது.
‘மறுமலர்ச்சி இயக்கம்’ என்ற அமைப்பின் நிர்வாகியான கோவை வே.ஈஸ்வரன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘கட்டாயக் கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில், பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீட்டில் சேர்க்கை வழங்கப்படுகிறது. இதற்கான செலவுத் தொகையை சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் வழங்கி வருகின்றன.