
சென்னை: திமுக பிரமுகரான தெய்வச்செயல் மீது ஆளுநரிடம் புகார் அளிக்க வந்த அவரது மனைவி, போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த காவனூரைச் சேர்ந்தவர் தெய்வா என்ற தெய்வச்செயல்(40). அரக்கோணம் மத்திய ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக இருந்தார்.
இவர், அரக்கோணம் அடுத்த பரித்திபுத்தூரைச் சேர்ந்த கல்லூரி மாணவி ப்ரீத்தி(21) என்பவரை கடந்த ஜனவரியில் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும், இருவரும் அரக்கோணத்தில் வசித்து வந்துள்ளனர். அப்போது, அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.