• May 23, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: புதுடெல்லியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், கோவாவுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட்டும், ராஜஸ்தானுக்கு வெப்ப அலைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

இதுகுறித்து பேசிய இந்திய வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி அகில் ஸ்ரீவஸ்தவா, “டெல்லியில் அடுத்த இரண்டு நாட்களில் இடியுடன் கூடிய மழை மற்றும் லேசானது முதல் மிக லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். டெல்லியில் புதன்கிழமை இரவு புழுதிப் புயல்கள், இடியுடன் கூடிய மழை, ஆலங்கட்டி மழை மற்றும் கனமழை பெய்தது. வானிலையில் ஏற்பட்ட இந்த திடீர் மாற்றம் "சூறாவளி சுழற்சி"யின் விளைவாகும்” என்றார்

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *