
சென்னை: கிழக்கு கடற்கரைச் சாலையை 6 வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் எ.வ.வேலு, பணிகளை விரைவாக முடிக்க ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தினார்.
இதுகுறித்து அரசு சார்பில் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: "சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் விரைவான பயணத்தை உறுதி செய்யும் வகையில், மாநில நெடுஞ்சாலைத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் திருவான்மியூர் முதல் அக்கரை வரை 10.5 கிமீ நீளத்திற்கு ஆறுவழிச் சாலையாக அகலப்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அதேபோல், திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை 14 கிமீ தொலைவுக்கு உயர்மட்ட மேம்பாலமும் அமைக்கப்பட உள்ளது.