
மேட்டூர்: மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 13,606 கனஅடி நீர்வரத்து உள்ள நிலையில், ஜூன் 12-ம் தேதி காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்நிலையில், அணையில் சேலம் ஆட்சியர் பிருந்தாதேவி நேற்று ஆய்வு மேற்கொண்டார். மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படும்.
நடப்பாண்டில் அணையில் நீர் இருப்பு திருப்திகரமாக இருப்பதால் ஜூன் 12-ம் தேதி அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை, வழித்தடம் உள்ளிட்டவை குறித்து சேலம் ஆட்சியர் பிருந்தா தேவி நேற்று மேட்டூர் அணையில் ஆய்வு மேற்கொண்டார்.