
சென்னை: தமிழகத்தில் எந்த இடத்தில் பெண்கள் பாதிக்கப்பட்டாலும் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்த அதிமுக தயங்காது என்று பொதுச்செயலாளர் பழனிசாமி எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை பல் மருத்துவக் கல்லூரியில் பணிபுரியும் ஒரு துறையின் தலைவர், உடன் பணியாற்றும் பேராசிரியர்கள் மற்றும் மாணவிகளிடம் ஆபாச வார்த்தைகளைப் பேசுவது, உடல் உருவ அமைப்பை கேலி செய்வது, அவர்களை வீடியோ படங்கள் எடுப்பது, பேசுவதை ரெக்கார்டு செய்வது போன்ற தகாத செயல்களில் ஈடுபட்டு வருவதால், அக்கல்லூரியில் பணிபுரியும் ஆசிரியைகளும், மாணவிகளும் தினம் தினம் மனஉளைச்சலைச் சந்தித்து அவதியுற்று வருகின்றனர்.