
தேஷ்நோக்/சென்னை: நாடு முழுவதும் ரூ.1,100 கோடியில் புதுப்பிக்கப்பட்ட 103 அமிர்த ரயில் நிலையங்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
இந்தியாவில் நாள்தோறும் சுமார் 3 கோடி பேரும், ஓராண்டில் சுமார் 800 கோடி பேரும் ரயில்களில் பயணம் மேற்கொள்கின்றனர். இதை கருத்தில் கொண்டு ரயில் நிலையங்களில் பயணிகளுக்கான வசதியை மேம்படுத்த கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் 6-ம் தேதி அமிர்த ரயில் நிலையம் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.