
மதுரை: அரசு போக்குவரத்து கழக உதவி பொறியாளருக்கு தொமுச நிர்வாகியின் கடிதத்தின் அடிப்படையில் வழங்கப்பட்ட இடமாறுதலுக்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ஆர்.பாலாஜி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், "விருதுநகர் அரசு போக்குவரத்து கழகத்தில் 2015-ல் உதவி பொறியாளராக பணியில் சேர்ந்தேன். கடந்த 2022-ல் விருதுநகரில் பணிபுரிந்த போது, பேருந்தில் பயணி தவறவிட்ட பொருட்களை கண்டுபிடித்து உரிய பயணியிடம் போலீஸார் முன்னிலையில் திரும்ப வழங்கினேன்.