
புதுடெல்லி: எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்திவிட்டு, பயங்கரவாத சூழலுக்கு எதிரான நடவடிக்கையில் பாகிஸ்தானை ஈடுபடுமாறு துருக்கி கடுமையாக வலியுறுத்தும் என எதிர்பார்ப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.
இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், "எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்தவும், பல தசாப்தங்களாக அது வளர்த்து வரும் பயங்கரவாத சூழலுக்கு எதிராக நம்பகமான நடவடிக்கைகளை எடுக்குமாறு, பாகிஸ்தானை துருக்கி கடுமையாக வலியுறுத்தும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஒருவருக்கொருவரின் கவலைகளின் உணர்திறன்கள் அடிப்படையில் உறவுகள் கட்டமைக்கப்படுகின்றன.