• May 22, 2025
  • NewsEditor
  • 0

காஞ்சிபுரம்: சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழமத்தின் சார்பில் பல்வேறு புதிய திட்டப் பணிகளை மேம்படுத்தும் விதமாக காஞ்சிபுரம் மாவட்டம் கோவூர் கோயில் குளம், ஐயப்பந்தாங்கல் பேருந்து நிலையம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

இந்தப் பணிகளுக்கான பூமி பூஜையை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு ஆகியோர் பங்கேற்று தொடங்கி வைத்தனர். இவற்றுடன் ஆதம்பாக்கம் பாலகிருஷ்ணா தெருவில் புதிய பல் நோக்கு மையம் அமைப்பதற்காக ரூ.9.91 கோடி மதிப்பில் புதிய பணிகளுக்கும் பூமி பூஜை நடைபெற்றது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *