
திருப்பூர்: திருப்பூர் அருகே கரைப்புதூரில் தனியார் சாய ஆலையின் மனிதக்கழிவு தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் 3 பேர் இறந்த நிலையில், சம்பந்தப்பட்ட ஆலையை தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் இயக்குநர் மருத்துவர் ரவிவர்மன் இன்று (மே 22) ஆய்வு செய்தார்.
திருப்பூர் அருகே கரைப்புதூரில் தனியார் சாய ஆலையின் மனிதக்கழிவு தொட்டியை கடந்த 19-ம் தேதி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட, திருப்பூர் சுண்டமேட்டை சோ்ந்த சரவணன் (30). வேணுகோபால் (31) மற்றும் ஹரி கிருஷ்ணன் (26) ஆகியோர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். இதில் சின்னச்சாமி (36) என்பவரும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகிறார்.