• May 22, 2025
  • NewsEditor
  • 0

திருப்பூர்: திருப்பூர் அருகே கரைப்புதூரில் தனியார் சாய ஆலையின் மனிதக்கழிவு தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் 3 பேர் இறந்த நிலையில், சம்பந்தப்பட்ட ஆலையை தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் இயக்குநர் மருத்துவர் ரவிவர்மன் இன்று (மே 22) ஆய்வு செய்தார்.

திருப்பூர் அருகே கரைப்புதூரில் தனியார் சாய ஆலையின் மனிதக்கழிவு தொட்டியை கடந்த 19-ம் தேதி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட, திருப்பூர் சுண்டமேட்டை சோ்ந்த சரவணன் (30). வேணுகோபால் (31) மற்றும் ஹரி கிருஷ்ணன் (26) ஆகியோர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். இதில் சின்னச்சாமி (36) என்பவரும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *