
கோஹிமா: நாகாலாந்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி மீது பதிவு செய்யப்பட்ட பாலியல் துன்புறுத்தல் புகார் தொடர்பாக குற்றவியல் விசாரணை தொடங்கப்பட்டதை அடுத்து, அவரை பணியிடைநீக்கம் செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
நாகாலாந்து மாநில நிதித்துறையில் செயலாளராக பணியாற்றிய ரெனி வில்பிரட் மீது, பாலியல் துன்புறுத்தல் மற்றும் பெண்களை அவமதித்ததற்கான பிஎன்எஸ் பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று அம்மாநில தலைமைச் செயலாளர் ஜே ஆலம் வெளியிட்ட பணியிடைநீக்க உத்தரவில் தெரிவித்தார்.