
புதுடெல்லி: பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான் நாடுகள் தங்களின் ஆதரவினை தெரிவித்துள்ளன.
ஆபரேஷன் சிந்தூரின் ஒரு பகுதியாக பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் முயற்சியை விளக்கும் விதமாக ஐக்கிய ஜனதாதளம் கட்சி எம்.பி சஞ்சய் குமார் ஜா மற்றும் சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே) எம்.பி. ஸ்ரீகாந்த் ஷிண்டே தலைமையிலான அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுக்கள் முறையே ஜப்பான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு பயணித்தன. அங்கு அவர்கள் இன்று பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் பாகிஸ்தானின் கொள்கைகளை எடுத்துரைத்தனர்.