
லக்னோ: வரும் 2027-ல் உத்தரப்பிரதேசத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக படுதோல்வி அடையும் என்று மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் 3 கட்டங்களாக 1.93 லட்சம் ஆசிரியர்களை பணியமர்த்த இருப்பதாக மாநில அரசு தனது எக்ஸ் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. பின்னர் அந்த பதிவு நீக்கப்பட்டது. இது குறித்து அதிகாரிகள் இதுவரை எந்த விளக்கத்தையும் வெளியிடவில்லை.