
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் சிங்போரா சத்ரூவில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அங்குள்ள கிஷ்த்வார் மாவட்டத்தின் சிங்போரா பகுதியில் உள்ள சத்ரூவில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையில் இந்தத் துப்பாக்கிச் சண்டை நடந்தது.
"ஆபரேஷன் ட்ருஷி' என்று பெயரிடப்பட்ட இந்த கூட்டு நடவடிக்கையில் துப்பாக்கிச் சண்டை மூண்டதும் கூடுதல் படைகள் நிலைநிறுத்தப்பட்டன. பயங்கரவாதிகளை அழித்தொழிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன” என்று ராணுவத்தின் வொயிட் கார்ப்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.