
புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தில் 82 பாலங்கள் பாதுகாப்பற்றவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. இதை அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் குறிப்பிட்ட அம்மாநில அரசு, இன்னும் அவை செயல்பாட்டில் உள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளது.
அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ அமர்வில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பற்ற பாலங்கள் தொடர்பான இம்மனுவை சமூக செயற்பாட்டாளரான ஞானேந்திர நாத் பாண்டே அளித்திருந்தார்.