
புதுடெல்லி: ஹாங்காங், சிங்கப்பூர் உள்ளிட்ட ஆசிய நாடுகளில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவின் மும்பை, சென்னை மற்றும் அகமதாபாத் உள்ளிட்ட நகங்களிலும் கரோனா பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருகிறது. எனினும், முந்தைய கரோனா அலையுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவு ஆகும்.
மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 106 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக மும்பையில் மே மாதத்தில் மட்டும் 95 பேர் பாதிக்கப்பட்டனர். 16 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா பரவலைத் தடுக்க, காய்ச்சல் அறிகுறி உள்ள அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.